புதன், 24 ஏப்ரல், 2013

நன்றி – மனிதனின் அடையாளம்

ஒருவன் மனிதன் என்பதற்கு பல அடையாளங்கள் இருக்கின்றன. அவை அன்பு, பண்பு, பகுத்தறிவு, நேர்மை, உண்மை, நன்றி.

மனிதனுக்கு முதல் அடையாளம் பகுத்தறிவு, இரண்டாவது அடையாளம் நன்றி. இந்த இரண்டு அடையாளங்களும் இல்லாவிட்டால் மனிதத்தன்மை நிறைவுபெறாது.

மனிதனுக்கும் மிருகத்துக்கும் ஐந்து அறிவு உண்டு. படைப்புகளில் மனிதன் உயர்ந்தவன் என்பதால் அவனுக்கு அதிகபட்சம் கூடுதலாக ஒரு அறிவு வழங்கப் பட்டிருக்கிறது. அதுதான் பகுத்தறிவு.

மிருகத்துக்குப் பகுத்திறிவு இல்லை. அதனால் அதற்கு நல்லது கெட்டது தெரியாது. மனிதன் அப்படி அல்ல. அவனுக்குப் பகுத்தறிவு உண்டு. அதனால்தான் அவன் நல்லது கெட்டதை அறிகிறான். இந்த ஆற்றலை இறைவன் மனிதனுக்கு அருட்கொடையாக கொடுத்து இருக்கிறான். அதற்காக நாம் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்! நன்றி செலுத்துகிறோமா?

உலகெங்கும் இந்தக் கேள்விக்குப் பதில் கேள்விக்குறியாகவே இருக்கிறது. மனிதனுக்கு முழுஉருவம் கொடுத்து அவனை மனிதன் என்று உலகுக்கு அறிமுகம் செய்துவிட்டான் படைத்தவன். அவன் அந்த உயர் படைப்பபை தக்கவைத்துக்கொள்ள அவனுக்குப் பகுத்தறிவையும் அளித்துள்ளான்.

உலகில் எல்லா மனிதர்களும் பகுத்தறிவைப் பயன்படுத்துகிறார்களா? கேள்விக்குறியைக் கண்டுபிடித்த மேதைக்கு நன்றி!
உலக வாழ்வில் கேள்விக்குறிகள் இருவகைப்படும்.
மனிதனை நோக்கி  கேள்விக்குறி போனால் அவன் மனிதன் அல்ல. அவனிடமிருந்து கேள்விக்குறி போனால் அவன் மனிதன்.

ஒரு மனிதனை மனிதன் என்று சொல்ல அவனுடைய பகுத்தறிவுதான் காரணம்.
மனிதன் பகுத்தறிவை எப்படி வளர்த்துக்கொள்கிறான்? கேள்வி ஞான வழி. இதுதான் நிதர்சனமான உண்மை.

மனிதனைப் படைத்து அவனுக்குத் தேவையானவற்றை எல்லாம் படைத்து இருக்கிறான். அப்படிப்பட்ட இறைவனுக்கு மனிதன் நன்றி செலுத்துகிறானா?

செலுத்தினால் அவன் மனிதன். இல்லாவிட்டால் அவன் மனிதனே அல்ல.
மனித அடையாளங்களில் முதன்மையானது நன்றி. படைத்த இறைவனை வணங்குவது முதல் நன்றி. ஒருவன் செய்த உதவிக்கி பதில் உதவி செய்வது இரண்டாவது நன்றி!
இந்த இரண்டு நன்றிகளையும் யார் செய்கிறார்கள் என்றால் ‘நல்ல உள்ளம்’ படைத்தவர்கள்.

‘செடிகள், (கொடிகள்) மரங்கள் (முதலிய யாவும்) இறைவனுக்கு வழிப்பட்டு சிரம் பணிகின்றன’ (55:6) திருக்குர்ஆன்  கூறும் இந்த வசனம், ‘எங்களைப் படைத்து. எங்களுக்கு மழையை இறக்குகிற இறைவனுக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம்’  என்று மனிதனுக்குப் பாடம் சொல்லித்தருகிறது.
இறைவனுக்கு நன்றி செலுத்தி நம் வாழ்க்கையை நன்றியால் நிரப்பி மனிதனாக வாழ்வோமாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக