ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

கோபத்தைத் தவிர்க்கும் வழி


ஆன்மிக வாழ்க்கையில் கோபம் என்பது அறவே இருக்கக் கூடாது. அவ்வாறு கோபம் இருந்தால் அது மிக பெரிய ஆன்மிக ஏறாமற்றத்தை உண்டாக்கிவிடும் உங்களையறியாமள்.

கோபம் எதனால் வருகின்றது: - ஒரு செயலைச் செய்யும்போது அல்லது பார்க்கும் போது அதன் மீது நமது நாட்டம் போகின்றது. அந்த நாட்டம் அளவு கடந்தாக இருந்தால் அதிக எதிர்பார்புடன் இருக்கின்றோம். நாம் எதிப்பார்தபடி பார்க்கும் செயல் இல்லையென்றாலும் அல்லது எதிர்பாத்த படி நாம் செய்யும் செயல் இல்லையென்றலும் அதிகமான கோபம் மற்றும் வெறுப்பு வருகின்றது. இது மனிதனுக்கு இயற்கையாக வரக்கூடயதாகும். எனவே அதனை அதன் போக்கில் விட்டுவிடாமல் நிலைமை என்னவென்று அறிந்து சிறிது சிறிதாக நம் உணர்ச்சிகளை கட்டுபடுத்த அல்லது பழக்கப்படுத்த விட்டோமானால், இது நாலடைவில் நமக்கு ஒரு பெரிய மழம் கொடுக்கும் மரமாக மாறி அதிக மனோபலத்தை பெற வழி செய்கின்றது அல்லது அபாரமான சகிப்புதன்மையை உன்டுபன்னுகிறது.  இதனை அம்சமாகக் கொண்டு மனிதனுக்கு இயற்கைக் கொடுத்த திறமையை இதன் மூலம் வெளிக் கொண்டுவரலாம்.

கோபத்தை தவிர்க்க கிழே கொடுக்கப்பட்டுள்ள கதை ஒன்று எளிமையான வழி காட்டுகின்றன:

ஒரு பெரியவருக்கும் ஒரு வயாபாரிக்கும் தகராறு.

ஒரு விஷயத்தைக் கோர்ட்டுக்குக் கொண்டுபோக வேண்டும் என்று வியாபாரி விரும்பினார். ஆனால் அது பெரியவருக்கு பிடிக்கவில்லை.

ஒரு சமயம் இது பற்றிப் பேசுவதற்காகப் பெரியவர் வியாபாரியின் வீட்டிற்குச் சென்றனர். வேலைக் காரனைப் பார்த்து, “ஐயா வீட்டில் இருக்கிறாரா?” என்று விசாரித்தார்.

இதை உள்ளேயிருந்தே கேட்டுக் கொண்டிருந்த வியாபாரி இவர் காதில் படும்படியாக, “ஐயா இல்லையென்று அந்த மடையனிடம் சொல்” என்றார்.

இதைக் கேட்ட பெரியவர், “கடவுள் உனக்கு நல்ல புத்தி கொடுக்கட்டும்!” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

இதைக் கேட்டு வியாபாரியின் மனதும் மாறிற்று. அன்று மாலையே பெரியவரைத் தேடிக்கொண்டு வியாபாரி அவர் வீட்டுக்குச் சென்றார்.

“நான் உங்களை எவ்வளவோ கன்னாபின்னாவென்று பேசியிருக்கிறேன். ஆனால் உங்களுக்குக் கோபம் வருவதில்லேயே, எப்படி?” என்று கேட்டார்.

அதற்குப் பெரியவர், “கோபமே வராமல் இருக்க நான் ஒரு வழி கண்டு பிடித்திருக்கிறேன்.

“கோபம் வரும்பொழுது நாம் என்ன பண்ணுகிறோம்? கத்திப் பேசுகிறோம். கோபமாக இருக்கும்போது மெதுவாகப் பேச முடியாது. அதைப் போலவே மெதுவாகப் பேசினால் கோபம் வராது.

ஆகவே எப்பொழுதும் மெதுவாகப் பேசுவது என்று நான் வைத்திருக்கிறேன்” என்றார்.

என்ன பெருமை?

சீடன் ஒருவன் தன் குருவைக் கண்டு வணங்குவதற்காகக் காணிக்கைப் பொருளுடன் சென்றுகொண்டிருந்தான். அந்தக் குருவின் மீது ஏற்கனவே பொறாமைக் கொண்டிருந்த யோகி ஒருவர் அந்தச் சீடனை வழிமறித்தார்.

 அவனைப் பார்த்து, “உன் குருவிற்கு எதுவுமே தெரியாது. அவர் ஒரு முட்டாள். நீ அவரைவிடப் பெரிய முட்டாள். அதனால்தான் நீ அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டுள்ளாய். உன் குருவால் ஏதேனும் அற்புதம் செய்து காட்ட முடியுமா? என்னைப் போல் அவரால் நீரில் நடக்க முடியுமா? வானத்தில் பறக்க முடியுமா? அல்லது பூமியில்தான் புதைந்து கிடக்க முடியுமா? அவரால் எதுவுமே முடியாது. அப்படிப்பட்ட குருவிடம் சென்று ஏன் உன் நேரத்தை வீணாக்குகிறாய்?” என்று தற்பெருமையுடன் கேட்டார்.

 அதற்கு அந்தச் சீடன், “நான் ஏன் அவரைக் குருவாகக் கொண்டிருக்கிறேன், மதிக்கிறேன், வணங்குகிறேன் தெரியுமா? அவர் எப்பொழுதும் பிறரைக் குறை சொல்லமாட்டார், கோபப்படமாட்டார். இவற்றைத்தான் நான் அற்புதங்களில் எல்லாம் மிகச் சிறந்த அற்புதம் என்று நினைக்கிறேன்” என்று பதில் தந்தான். இதைக் கேட்ட யோகி தலைக்கவிழ்ந்தபடி அவ்விடத்தை விட்டுச் சென்றார்.

 மனிதன் பல விலங்குகள் செய்யும் சாகசங்களையும், பறவைகள் செய்யும் வித்தைகளையும் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. அவ்வாறு அது அவசியம் என்றால் விலங்குகளுக்கு என்று இருக்கின்ற சில வெளித்தோற்ற சிறப்பியல்புகளை கடவுள் மனிதனுக்கும் கொடுத்திருப்பார். மனிதன் மனிதத் தன்மையோடு  மனிதனாக வாழவேண்டும் என்பதே இயற்கையின் நீதி. இதை மீறினால் இயற்கையின் அழிவுக்கு மனிதனே காரணமாகிவிடுகிறான்.

 ஆனால் ஒரு உண்மை இயற்கையின் எழிலை மனிதன்தான் சீற்குலைக்கின்றான். அவனால் செய்யப்படும் வினைகளை மாற்றங்களை முழுமையாக மறுசுயற்சி செய்யமுடியவில்லை தினறுகின்றான்.

சாப்பிட்ட பொருள் முழுமையாக ஜீரனம் அடையாவிட்டால் வயிற்று வலி தான் வரும். அது போன்று என்ன செயல் இயறக்கைக்கு ஒவ்வாமையைக இல்லாமல் இருக்கின்றதோ அதையே செய்து மற்றவைகளை செய்யாமல் அமைதியான போக்கில் உலகை வழி நடத்த வேண்டும், என்பதற்காகவே நமது முன்னேற்கள் ஆம்மிக வழியில் பல நுனுக்களை நமக்கு முன்கூட்டியே சொல்லியிருக்கின்றனர் ஆனால் அதன் அர்த்தங்கள் ஆழமானவை.

விஜயதசமி


நவராத்திரியின் கடைசி நாளில் கொண்டாடப் பெறும் பண்டிகை விஜயதசமி.

வஜயதசமிப் பண்டிகையை நம் நாட்டின் ‘கலைப் பண்டிகை’ என்றுதான் சொல்லவேண்டும். அஷராப்பியாஸம் செய்ய உகந்த நாள் இது.

அன்றைத் தினம் புனர்பூஜை செய்து, கலைமகளின் திருவடிகளைப் பணிந்து, கல்வி கற்பர். புதுத் தொழில்களை ஆரம்பிப்பர். சிலர் பிரயாணங்களைத் தொடங்குவர்.

விஜயதசமியன்று ஆரம்பிக்கப்பெறும் நற்காரியங்கள் எல்லா வழிகளிலும் வெற்றி அடகின்றன. ஆலைகளிலும் பள்ளிகளிலும் அலுவலகங்களிலும் இந்தப் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடுவார்கள்.

பண்டைக் கால மன்னர்கள் விஜயதசமி யன்று சிம்மாசனம், வெண்கொற்றைக் குடை, செங்கோல், சாமரம் மற்றும் தங்கள் படைக் கலங்களையும், யானை குதிரை போன்ற வாகனங்களையும் பூஜித்து வந்ததாகக் கல்வெட்டுகள் மூலம் கண்டறிகிறோம்.

விஜயதசமியன்று வன்னிமரத்தை வழிபடுவது ஒரு சிறப்பான அம்சமாகக் கருதப்படுகிறது. விஷ்னு கோவில்களில் ஸ்வாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வன்னிமரம் குத்தும் வழக்கம் இன்றும் நடைபெறுகிறது.

அஞ்ஞாதவாசத்தை மேற்கொள்ளப் புறப்பட்ட பாண்டவர்கள், தங்களது ஆயுதங்களை வன்னிமரத்துள் மறைத்து வைத்துச் சென்றதாகக் கூறுவர்.

ஒரு சமயம் உலகமாதா பரமேசுவரி வன்னிமரத்து நிழலில் எழுந்தருளி இளைப்பாறினாள். அது சமயம் சீதா தேவியைத் தேடிக்கொண்டு புறப்பட்டு வந்த அனுமான் வன்னிமர்த்தடியை வலம் வந்து வணங்கிப் புறப்பட்டான் என்று கூறப் பெறுகிறது.

இக்காரணம் பற்றியே பரமேசுவரி எழுந்தருளிய வன்னிமரம் துர்க்காதேவியின் சாந்நித்யம் என்று கருதப்பெறுகிறது. இதனால் வன்னி மரத்தைப் பூஜிப்பதால் பாவ நிவிருத்தியும் சத்ருநாசமும் ஏற்படுகின்றன.

விஜயதசமிநாள்  ஜயம், வீரம், செல்வம், கல்வி, ஆகிய அனைத்துக்கும் முக்கிய தினமாகக் கருதப்பெறுகிறது.

விஜயதசமிப் பண்டிகையன்று புனர்பூஜை புரிந்து, வன்னிமரத்தை வணங்கினாள், அன்னை மகிஷாசுரமர்த்தினியின் திருவருளாள் அன்றைய தினத்தில் தொடங்கும் புதிய காரியங்கள் எதுவாக இருந்தாலும் அது வெற்றியை நோக்கி செல்லும். புதிய ஆன்மிக அன்பர்கள் அன்றைய தினமே ஆன்மிக வாழ்க்கையை தொடங்கினாள் ஆன்மிகப் பாதையில் சிறந்த முன்னேற்றம் காணலாம் அதுமட்டும்யின்றி வாழ்க்கையில் சோகங்கள் வராது மங்களகரமான வாழ்க்கையே உண்டாகும்.

மேன்மக்கள் யார்?


அறிவு படைத்த மக்களில் மூன்று பிரிவு உண்டு

1.    கீழ்மக்கள்
2.    மக்கள்
3.    மேன்மக்கள்

கீழ்மக்கள்: மக்களாகப் பிறந்தும் மாக்களைப் போல் (விலங்குகளைப் போல்) உண்பதும் உறங்குவதும் பொருந்துவது மாகவே காலங் கழிப்பார் கீழ்மக்கள், பசி தாகங்களை அவிப்பதிலேயே நாட்டமுடையவர்.

மக்கள்: மக்கள் பண்பாட்டைப் பெற்ற ஈவு இரக்கம் சாந்தம் சீலம் முதலிய நற்குணங்களையுடையவராய் வாழ்பவர்.

மேன்மக்கள்: மக்கள் பண்பாட்டைப் பெற்றதோடு அமையாது, தெய்வத்தன்மை பெற்று, அருளாளராய், பிறகுக்கென்றே வாழ்பவராய், ஒவ்வொரு மூச்சும் உலகம் உய்யும்பொருட்டே வடுபவராய் வாழ்பவர்.

நம்மில் பலரை மக்களென்ற பேரும் வடிவம் கொண்டு, மக்கள் போலவே அருந்துதல் பொருந்துதலுடன் அமைந்து, துன்பத்தை இன்பமாக மயங்கி எண்ணி ஆமை போல் தெளிவின்றித் திறிகின்றனர்.

ஆமையைக் கொன்று தின்போர் அதன் முதுகில் கெட்டியான ஓடு இருப்பதால், அதனை எளிதில் கொல்ல கிழ்கண்டவாறு முயலுவர்.

மூன்று கற்களின் மீது பெரிய இரும்புக் கொப்பரையை வைத்து, நிரம்பத் தண்ணீர் விட்டுத் தீயை மூட்டி, அதில் ஆமையை விடுத்து, மேலே ஒரு தட்டை மூடிவிடுவர். ஆமைக்கும் சுவர்க்கலோகம் கிடைத்திருப்பதாக எண்ணி, இப்படியும் அப்படியுமாக நீரில் நீந்தி விளையாடும். தண்ணீர் சூடு ஏறிக் கொதிப்புற்றவுடன் அடிப் பகுதியில் சதையுள்ள ஆமை மாண்டு ஒழியும்.

அதுபோல, வாத, பித்த சிலேத்துமமாகிய மூன்று கற்களின் மீது உடம்பாகிய இரும்புக் கொப்பரையைக் கூற்றுவானாகிய கொலைஞன் வைத்து ஆசையாகிய தண்ணீரை விட்டு, ஆன்மாவாகிய ஆமையை அதில்  விடுத்து. பிராரப்த கர்மமாகிய தீயை மூட்டி, பந்த பாசமாகிய தட்டினால் மூடி வைத்திருக்கிறான். துன்பத்தை இன்பமாக எண்ணி ஆமை நீரில் நீந்தி விளையாடுவது போல் மனிதர்களாகிய நாம் தடுமாறுகிறோம்.


பாவமும் புண்ணியமும்

துறவி ஒருவருக்கு நரகத்தையும் சொர்கத்தையும் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாயிற்று.

நேராக நரகத்திற்குச் சென்றார். அங்கே ஒவ்வோர் இடமாகப் பார்த்துக்கொண்டே வந்தார். ஒரிடத்தில் ஒரு கால் மட்டும் இல்லாத நொண்டி ஒருவன் இந்தான்.

அவனிடம், “நீ யார்? நீ ஏன் நரகத்தற்கு வரவேண்டி வந்தது?” என்று கேட்டார்.

“துறவியாரே! நான் மண்ணுலகில் பெருஞ் செல்வனாக இருந்தேன். நிறையப் பாவங்களைச் செய்ததால் இங்கே நரகத்தில் துன்பப்படுகிறேன்” என்றான் அந்த நொண்டி.

துறவி நரகத்தை விட்டு நீங்கிச் சொர்க்கத்திற்குள் நுழைந்தார். அங்கே எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தனர். அவரும் ஒவ்வோரிடமாகப் பார்த்துக்கொண்டே வந்தார்.

ஒரிடத்தில் ஒரு கால் மட்டும் தனியாக இருந்தது. அதைப் பார்த்துத் துறவி பெருவியப்படைந்தார். உடனே பக்கத்திலிருந்த ஒருவனை அழைத்து, “ஆள் இல்லாமல் ஒரு கால்  மட்டும் சொர்க்கத்திற்கு வந்தது எப்படி?” என்று கேட்டார்.

அதற்கு அவன், “துறவியாரே! இந்தக் காலுக்கு உரியவன் கொடிய பாவி. அவன் செய்யாத பாவம் இல்லை. ஆனாலும் ஒரே ஒரு முறை தாகத்தால் தவித்த ஒரு மாட்டிற்கு இரங்கித் தொலைவில் இருந்த தண்ணீர்த் தொட்டியை இந்தக்க காலினால் உதைத்து அதனருகில் தள்ளினான். அந்தப் புண்ணியத்தால்தான் இந்த ஒரு கால் மட்டும் இங்கு உள்ளது. அவனோ நரகத்தில் துன்பப்படுகிறான்” என்று விளக்கம் தந்தான்.