புதன், 10 ஏப்ரல், 2013

கபீர்தாசின் அருள்வாக்கு

உன்மையைப் போன்ற தவம் இல்லை. பொய்யைப் போன்ற பாவம் இல்லை.
யாருடைய இதயத்தில் சக்தியம் இருக்கிறதோ அந்த இதயத்தில் குரு தானே இருக்கிறார்.

கடலின் அலைகள் எவ்வளவோ மனதின் அலையும் அவ்வளவே.
 (மனம்) ஒரு நிலையில் இருக்குமானால் எளிதாகவே வைரம் (கடவுள் தன்மை) உற்பத்தியாகிவிடும்.

செல்வத்தை எல்லோரும், விரும்பி வழிபடுகிறார்கள். செல்வத்தின் தலைவனை ஒருவரும் வழிபடுவதில்லை.
கடவுளை வழிபடு. எல்லா நன்மைகளும் உனக்கு அடிமையாகிவிடும்.

தூங்கி இரவை இழந்தாகிவிட்டது.
சாப்பிட்டுப் பகலும் போயிற்று.
பிறவி விலை மதிப்பற்ற வைரமாக இருந்தது. அதை இப்படி சல்லிக்காசுக்கு மாற்றியாகிவிட்டது.

ஆண்டவனால்தான் எல்லாம் நடக்கிறது. மனிதனால் ஒன்றும் இல்லை.
அவர் கடுகிலிருந்து மலையை ஆக்குவார். மலையைக் கடுகாகவும் ஆக்குவார்.

சிரித்துச் சிரித்து யாரும் கடவுளை அடைந்ததில்லை.
கடவுளை அடைந்தவன் அழுது அழுதே அவரை அடைந்தான்.
சந்தோஷமாக இருந்தே கடவுளை அடைந்துவிடலாம் என்றிருந்தால் யார் தான் அவரை அடையாமல் இருப்பார்கள்.

வாய் பேச்சை நிறுத்தி (ஆத்ம சாதனை என்ற) செய்கையில் மனதைச் செலுத்து.
நீர் குடிக்காமல் மனிதன் தாகம் போகாது.

தண்ணீரில் போகிறவனைப் போக விடாதே. கையைப் படித்துக் கரைக்கு இழு.
சொன்னதைக் கேட்காத போதிலும் இன்னும் இரண்டு தடவைச் சொல்லிப்பார்.

குரு, கோவிந்தன், இருவரும் நிற்கிறார்கள். முதலில் யார் காலில் விழுவேன்? குருநாதன் போற்றத் தகுந்தவர்.
(முதலில் குருவைத்தான் வணங்குவேன்.)
ஏனென்றால், அவர்தானே கோவிந்தனை எனக்கு காட்டிக் கொடுத்தார்.

உன் மனம் குளிர்ந்திருந்தால் உலகத்தில் உனக்கு எதிரி ஒருவருமில்லை.
இந்தத் ‘தான்’ என்கிற கர்வத்தைவிடு. எல்லோரும் உன்னிடம் அன்பு கொள்வார்கள்.

பிள்ளைப் பருவம், இளமை, கிழத்தனம் எல்லாம் கழிந்துவிட்டது. நான்காம் பருவம் வந்துவிட்டது.
எலியைப் பூனை நோக்கியிருப்பது போல் யமன் நோக்கியிருக்கிறான்.

உடலளவில் தங்களை யோகியாக எல்லோரும் செய்துகொள்வார்கள். ஒருவரும் மனதை அவ்விதம் செய்துகொள்வதில்லை. மனதால் யோகியானால் எளிதாகவே எல்லாவற்றையும் அடையலாம்.

ஆடலாம், பாடலாம் ( தேவாரம் – திருவாசகம் போன்ற ) பாடல்களை ஓதலாம். ஆனால் குருவிடம் பக்தி இல்லை. கபீ்ர் சொல்கிறார்: விதை இல்லாமல் வயலில் எப்படி விளைவு ஏற்படும்? ( குரு அன்பு விதை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக