புதன், 10 ஏப்ரல், 2013

ஒழுக்கம்

1. முன் காலத்தில் பிறர் மனைவியை இச்சித்தவன் ஒருவன்தான் இருந்தான் அவனுக்காக எழுதப்பட்டது ராமாயணம்.

முன்காலத்தில் பிறர் சொத்துக்கு ஆசைப்பட்டவன் ஒருவன் தான் இருந்தான். அனுக்காக எழுதியது பாரதம்.

இப்பொழுது எழுத ஆரம்பித்தால் ராமாயண – மகாபாரதங்கள் மலையாகக் குவியும்.

2. ஆயிரம் வருடம் யாரையும் கடிக்காத நாகம் தலையில் மாணிக்கம் இருக்கும்.

மனிதனும் பிரம்மசரிய விரதத்தைக் காத்தால் அபாரமான ஆத்மசக்தி வளரும்.

3. உடம்பால் வேலை செய்பவனை வட மூளையால் வேலை செய்பவனுக்குத் தான் அலுப்பு அதிகம்.

நிழலில் இருப்பவனுக்குக் கஷ்டமில்லை என்று நினைக்கக் கூடாது.

3. பிறர் உங்களைப் புகழ வேண்டுமானால் நீங்கள் பிறரைப் புகழுங்கள்.
நீ பிறரைக் குறை கூறினால், பிறர் உன்னைக் குறை கூறுவார்கள்.

4. காந்தியடிகள்  37-ஆவது வயதில் இல்வாழ்க்கையில் கசப்படைந்து மக்களுக்குச் சேவை செய்யத் தலைப்பட்டார்.
நமக்கு வயது 70 ஆனாலும் கூட வாழ்க்கையில் கசப்புத் தட்டுவதில்லை; உலக ஆசைகள் விடுவதில்லை.

5. நமக்கு ஆகாத மலர்களையெல்லாம் பரமசிவன் ஏற்றுக் கொண்டார்.
ஆகவே, செல்லாத காசும் அவர் உண்டியில் போடுவோம் என்று நினைப்பது தவறு.

6. கையில் பெருவிரல் தனியே நிற்கிறது. மற்ற விரல்கள் சேர்ந்து இருக்கிறது.
அது போல் பெரிய மனிதன் எப்போதும் ஒதுங்கியே வாழ்வான்.
சில்லரைகள் எப்போதும் ஒன்றாகச் சேர்ந்துகொள்ளும்.

7. பாண்டவர்கள் ஐந்து பேர்; துரியோதனாதிகள் நூறு பேர்; முன் காலத்திலேயே நல்லவர்கள் ஐந்து பேர்களும், தீவயவர்கள் நூறு பேர்களும் இருந்திருக்கிறார்கள்,

இப்போது கேட்க வேண்டுமா?

8. நன்மைக்குப் பாதை போகப் போக விரியும்.
தீமைக்குப் பாதை போகப் போகப் சுருங்கும்.

9. ஆட்டுப்பாலில் பிழுக்கை விழுந்தால் பிழுக்கையை எடுத்து  எறிந்துவிட்டுப் பாலை உபயோகிக்கிறோம்.

அதுபோல் மனிதனிடம் உள்ள குற்றத்தைப் பற்றிப் பேசாமல் குணத்தைப் பற்றியே பேச வேண்டும்.

10. பொய்மையாக வாழக் கூடாது.
பொய்மை பேசக் கூடாது.

வாழ்வு சிறக்க வேண்டுமானால் பொய்யை விட்டுவட வேண்டும்.
பொய்யா விளக்கே இருளகற்றி ஒளி காட்டும்.

அறங்களுக்கெல்லாம் தலையாயது பொய்யாமை.

ஆக பொய் பேசாதே.
சத்தியமே நித்தியம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக