புதன், 10 ஏப்ரல், 2013

குருநானக் அருள்வாக்கு

1.    இறைவனின் சங்கல்பமே உலகிலுள்ள எல்லாப் பொருள்களிலும் வெளிப்பட்டிருக்கிறது. ஆனால் அருடைய சங்கல்பம் ‘இவ்வளவுதான்’ என்று வர்ணிக்கும் சொற்களில் அடங்காமல் கடந்து விளங்கிறது.

தெய்வ சங்கல்பத்தின் மூலமாகவே மகிமை கிடைக்கிறது.
அவருடைய சங்கல்பத்தினால் சிலர் உயர்ந்த வர்களாகவும், சிலர் தாழ்ந்தவர்களாகவும் பிறக்கிறார்கள்.
2.    இறைவனின் சங்கல்பப்படியே மக்கள் சுகங்களையும்
துக்கங்களையும் அடைகிறார்கள்.

இறைவன் சங்கல்பத்தினாலே தூய பக்தர்கள் முக்தியும் பெறுகிறார்கள்.
 
3.    பக்தி இல்லாதவர்கள், இறைவன் சங்கல்பத்தின்படி
முடிவற்ற (சம்சாரம் என்ற) பிறவிக்கடலில் சிக்கித் தத்தளிக்கிறார்கள்.

4.    சிலர் இறைவனின் மகிமையைப் பாடுகிறார்கள். அதுவும்
அவர் வழங்கும் ஆற்றலுக்கு ஏற்பவே அமைகிறது; அவர் வழங்கும் செல்வங்களை அவருடைய அருளுக்குச் சாட்சியெனக் கொண்டு சிலர் பாடுகிறார்கள்; வேறு சிலர் எவராலும் அறிய முடியாதவன் இறைவன் என்று பாடுகிறார்கள்.

5.    மண்ணை உயிராக்கி, பிரகு உயிரை மறுபடியும்
மண்ணாக்குகிறார் அவரே என்று சிலர் பாடுகிறார்கள்;
படைப்பவரும் அவரே; அழிப்பவரும் அவரே; உயிரைக் கொடுப்பவரும் அவரே: பறிப்பவரும் அவரே.

6.    ஒரே சமயத்தில் நமக்கு மிகவும் அருகில் 
  இருப்பவராகவும், மிகவும் தொலைவில் இருப்பவராகவும்
  அவர் விளங்குகிறார் என்று சிலர் பாடுகிறார்கள்.
 
  அவரை வர்ணிப்பதற்கு எல்லையே இல்லை.
 
       எண்ணற்றவர்கள் அவரை வர்ணிக்க முயற்சி   செய்திருக்கிறார்கள். எனினும் அவர் வர்ணனைக்கு அப்பாற்பட்ட ஒருவராகவே விளங்குகிறார்.

இறைவனின் திருவருளைப் பெற்றவர்கள் களைப்படையக் கூடும். ஆனால் அவர் களைப்பே இல்லாதவர்,

காலம் காலமாக அவர் அருளினால்தான் மனிதன் உயிர் வாழ்கிறான். அவருடைய சங்கல்பத்தினால்தான் உலகம் இயங்குகிறது. இருந்தாலும் யாருடைய தயவும் கவனிப்பும் தேவைப்படாதவர் அவர்.

7.    இறைவன் சக்தியம், அவருடைய புனிதச் சொல்லும் 
சத்தியமானது. அவருடைய அன்புக்கு எல்லையே கிடையாது.
8.    செல்வம் தருமாறு மனிதர்கள் இறைவனிடம்
பிரார்த்தனை செய்கிறார்கள். அவரும் அவர்கள் கேட்கும் எல்லாவற்றையும் வாரி வாரி வழங்கியபடியே இருக்கிறார்.

எல்லாமே அவருடையதாக இருக்கும்போது அவரது பாதகமலங்களில் நாம் என்ன காணிக்கை செலுத்த முடியும்? என்ன சொல்லி அவருடைய அன்பைப் பெறமுடியும்?

9.    விடியற்காலை நேரங்களில் ஜபம், தியானம்
ஆகியவற்றின் மூலம் இறைவனுடன் ஒன்றுபடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக