ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

கோபத்தைத் தவிர்க்கும் வழி


ஆன்மிக வாழ்க்கையில் கோபம் என்பது அறவே இருக்கக் கூடாது. அவ்வாறு கோபம் இருந்தால் அது மிக பெரிய ஆன்மிக ஏறாமற்றத்தை உண்டாக்கிவிடும் உங்களையறியாமள்.

கோபம் எதனால் வருகின்றது: - ஒரு செயலைச் செய்யும்போது அல்லது பார்க்கும் போது அதன் மீது நமது நாட்டம் போகின்றது. அந்த நாட்டம் அளவு கடந்தாக இருந்தால் அதிக எதிர்பார்புடன் இருக்கின்றோம். நாம் எதிப்பார்தபடி பார்க்கும் செயல் இல்லையென்றாலும் அல்லது எதிர்பாத்த படி நாம் செய்யும் செயல் இல்லையென்றலும் அதிகமான கோபம் மற்றும் வெறுப்பு வருகின்றது. இது மனிதனுக்கு இயற்கையாக வரக்கூடயதாகும். எனவே அதனை அதன் போக்கில் விட்டுவிடாமல் நிலைமை என்னவென்று அறிந்து சிறிது சிறிதாக நம் உணர்ச்சிகளை கட்டுபடுத்த அல்லது பழக்கப்படுத்த விட்டோமானால், இது நாலடைவில் நமக்கு ஒரு பெரிய மழம் கொடுக்கும் மரமாக மாறி அதிக மனோபலத்தை பெற வழி செய்கின்றது அல்லது அபாரமான சகிப்புதன்மையை உன்டுபன்னுகிறது.  இதனை அம்சமாகக் கொண்டு மனிதனுக்கு இயற்கைக் கொடுத்த திறமையை இதன் மூலம் வெளிக் கொண்டுவரலாம்.

கோபத்தை தவிர்க்க கிழே கொடுக்கப்பட்டுள்ள கதை ஒன்று எளிமையான வழி காட்டுகின்றன:

ஒரு பெரியவருக்கும் ஒரு வயாபாரிக்கும் தகராறு.

ஒரு விஷயத்தைக் கோர்ட்டுக்குக் கொண்டுபோக வேண்டும் என்று வியாபாரி விரும்பினார். ஆனால் அது பெரியவருக்கு பிடிக்கவில்லை.

ஒரு சமயம் இது பற்றிப் பேசுவதற்காகப் பெரியவர் வியாபாரியின் வீட்டிற்குச் சென்றனர். வேலைக் காரனைப் பார்த்து, “ஐயா வீட்டில் இருக்கிறாரா?” என்று விசாரித்தார்.

இதை உள்ளேயிருந்தே கேட்டுக் கொண்டிருந்த வியாபாரி இவர் காதில் படும்படியாக, “ஐயா இல்லையென்று அந்த மடையனிடம் சொல்” என்றார்.

இதைக் கேட்ட பெரியவர், “கடவுள் உனக்கு நல்ல புத்தி கொடுக்கட்டும்!” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

இதைக் கேட்டு வியாபாரியின் மனதும் மாறிற்று. அன்று மாலையே பெரியவரைத் தேடிக்கொண்டு வியாபாரி அவர் வீட்டுக்குச் சென்றார்.

“நான் உங்களை எவ்வளவோ கன்னாபின்னாவென்று பேசியிருக்கிறேன். ஆனால் உங்களுக்குக் கோபம் வருவதில்லேயே, எப்படி?” என்று கேட்டார்.

அதற்குப் பெரியவர், “கோபமே வராமல் இருக்க நான் ஒரு வழி கண்டு பிடித்திருக்கிறேன்.

“கோபம் வரும்பொழுது நாம் என்ன பண்ணுகிறோம்? கத்திப் பேசுகிறோம். கோபமாக இருக்கும்போது மெதுவாகப் பேச முடியாது. அதைப் போலவே மெதுவாகப் பேசினால் கோபம் வராது.

ஆகவே எப்பொழுதும் மெதுவாகப் பேசுவது என்று நான் வைத்திருக்கிறேன்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக