ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

மேன்மக்கள் யார்?


அறிவு படைத்த மக்களில் மூன்று பிரிவு உண்டு

1.    கீழ்மக்கள்
2.    மக்கள்
3.    மேன்மக்கள்

கீழ்மக்கள்: மக்களாகப் பிறந்தும் மாக்களைப் போல் (விலங்குகளைப் போல்) உண்பதும் உறங்குவதும் பொருந்துவது மாகவே காலங் கழிப்பார் கீழ்மக்கள், பசி தாகங்களை அவிப்பதிலேயே நாட்டமுடையவர்.

மக்கள்: மக்கள் பண்பாட்டைப் பெற்ற ஈவு இரக்கம் சாந்தம் சீலம் முதலிய நற்குணங்களையுடையவராய் வாழ்பவர்.

மேன்மக்கள்: மக்கள் பண்பாட்டைப் பெற்றதோடு அமையாது, தெய்வத்தன்மை பெற்று, அருளாளராய், பிறகுக்கென்றே வாழ்பவராய், ஒவ்வொரு மூச்சும் உலகம் உய்யும்பொருட்டே வடுபவராய் வாழ்பவர்.

நம்மில் பலரை மக்களென்ற பேரும் வடிவம் கொண்டு, மக்கள் போலவே அருந்துதல் பொருந்துதலுடன் அமைந்து, துன்பத்தை இன்பமாக மயங்கி எண்ணி ஆமை போல் தெளிவின்றித் திறிகின்றனர்.

ஆமையைக் கொன்று தின்போர் அதன் முதுகில் கெட்டியான ஓடு இருப்பதால், அதனை எளிதில் கொல்ல கிழ்கண்டவாறு முயலுவர்.

மூன்று கற்களின் மீது பெரிய இரும்புக் கொப்பரையை வைத்து, நிரம்பத் தண்ணீர் விட்டுத் தீயை மூட்டி, அதில் ஆமையை விடுத்து, மேலே ஒரு தட்டை மூடிவிடுவர். ஆமைக்கும் சுவர்க்கலோகம் கிடைத்திருப்பதாக எண்ணி, இப்படியும் அப்படியுமாக நீரில் நீந்தி விளையாடும். தண்ணீர் சூடு ஏறிக் கொதிப்புற்றவுடன் அடிப் பகுதியில் சதையுள்ள ஆமை மாண்டு ஒழியும்.

அதுபோல, வாத, பித்த சிலேத்துமமாகிய மூன்று கற்களின் மீது உடம்பாகிய இரும்புக் கொப்பரையைக் கூற்றுவானாகிய கொலைஞன் வைத்து ஆசையாகிய தண்ணீரை விட்டு, ஆன்மாவாகிய ஆமையை அதில்  விடுத்து. பிராரப்த கர்மமாகிய தீயை மூட்டி, பந்த பாசமாகிய தட்டினால் மூடி வைத்திருக்கிறான். துன்பத்தை இன்பமாக எண்ணி ஆமை நீரில் நீந்தி விளையாடுவது போல் மனிதர்களாகிய நாம் தடுமாறுகிறோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக