ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

விஜயதசமி


நவராத்திரியின் கடைசி நாளில் கொண்டாடப் பெறும் பண்டிகை விஜயதசமி.

வஜயதசமிப் பண்டிகையை நம் நாட்டின் ‘கலைப் பண்டிகை’ என்றுதான் சொல்லவேண்டும். அஷராப்பியாஸம் செய்ய உகந்த நாள் இது.

அன்றைத் தினம் புனர்பூஜை செய்து, கலைமகளின் திருவடிகளைப் பணிந்து, கல்வி கற்பர். புதுத் தொழில்களை ஆரம்பிப்பர். சிலர் பிரயாணங்களைத் தொடங்குவர்.

விஜயதசமியன்று ஆரம்பிக்கப்பெறும் நற்காரியங்கள் எல்லா வழிகளிலும் வெற்றி அடகின்றன. ஆலைகளிலும் பள்ளிகளிலும் அலுவலகங்களிலும் இந்தப் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடுவார்கள்.

பண்டைக் கால மன்னர்கள் விஜயதசமி யன்று சிம்மாசனம், வெண்கொற்றைக் குடை, செங்கோல், சாமரம் மற்றும் தங்கள் படைக் கலங்களையும், யானை குதிரை போன்ற வாகனங்களையும் பூஜித்து வந்ததாகக் கல்வெட்டுகள் மூலம் கண்டறிகிறோம்.

விஜயதசமியன்று வன்னிமரத்தை வழிபடுவது ஒரு சிறப்பான அம்சமாகக் கருதப்படுகிறது. விஷ்னு கோவில்களில் ஸ்வாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வன்னிமரம் குத்தும் வழக்கம் இன்றும் நடைபெறுகிறது.

அஞ்ஞாதவாசத்தை மேற்கொள்ளப் புறப்பட்ட பாண்டவர்கள், தங்களது ஆயுதங்களை வன்னிமரத்துள் மறைத்து வைத்துச் சென்றதாகக் கூறுவர்.

ஒரு சமயம் உலகமாதா பரமேசுவரி வன்னிமரத்து நிழலில் எழுந்தருளி இளைப்பாறினாள். அது சமயம் சீதா தேவியைத் தேடிக்கொண்டு புறப்பட்டு வந்த அனுமான் வன்னிமர்த்தடியை வலம் வந்து வணங்கிப் புறப்பட்டான் என்று கூறப் பெறுகிறது.

இக்காரணம் பற்றியே பரமேசுவரி எழுந்தருளிய வன்னிமரம் துர்க்காதேவியின் சாந்நித்யம் என்று கருதப்பெறுகிறது. இதனால் வன்னி மரத்தைப் பூஜிப்பதால் பாவ நிவிருத்தியும் சத்ருநாசமும் ஏற்படுகின்றன.

விஜயதசமிநாள்  ஜயம், வீரம், செல்வம், கல்வி, ஆகிய அனைத்துக்கும் முக்கிய தினமாகக் கருதப்பெறுகிறது.

விஜயதசமிப் பண்டிகையன்று புனர்பூஜை புரிந்து, வன்னிமரத்தை வணங்கினாள், அன்னை மகிஷாசுரமர்த்தினியின் திருவருளாள் அன்றைய தினத்தில் தொடங்கும் புதிய காரியங்கள் எதுவாக இருந்தாலும் அது வெற்றியை நோக்கி செல்லும். புதிய ஆன்மிக அன்பர்கள் அன்றைய தினமே ஆன்மிக வாழ்க்கையை தொடங்கினாள் ஆன்மிகப் பாதையில் சிறந்த முன்னேற்றம் காணலாம் அதுமட்டும்யின்றி வாழ்க்கையில் சோகங்கள் வராது மங்களகரமான வாழ்க்கையே உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக