ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

கோபத்தைத் தவிர்க்கும் வழி


ஆன்மிக வாழ்க்கையில் கோபம் என்பது அறவே இருக்கக் கூடாது. அவ்வாறு கோபம் இருந்தால் அது மிக பெரிய ஆன்மிக ஏறாமற்றத்தை உண்டாக்கிவிடும் உங்களையறியாமள்.

கோபம் எதனால் வருகின்றது: - ஒரு செயலைச் செய்யும்போது அல்லது பார்க்கும் போது அதன் மீது நமது நாட்டம் போகின்றது. அந்த நாட்டம் அளவு கடந்தாக இருந்தால் அதிக எதிர்பார்புடன் இருக்கின்றோம். நாம் எதிப்பார்தபடி பார்க்கும் செயல் இல்லையென்றாலும் அல்லது எதிர்பாத்த படி நாம் செய்யும் செயல் இல்லையென்றலும் அதிகமான கோபம் மற்றும் வெறுப்பு வருகின்றது. இது மனிதனுக்கு இயற்கையாக வரக்கூடயதாகும். எனவே அதனை அதன் போக்கில் விட்டுவிடாமல் நிலைமை என்னவென்று அறிந்து சிறிது சிறிதாக நம் உணர்ச்சிகளை கட்டுபடுத்த அல்லது பழக்கப்படுத்த விட்டோமானால், இது நாலடைவில் நமக்கு ஒரு பெரிய மழம் கொடுக்கும் மரமாக மாறி அதிக மனோபலத்தை பெற வழி செய்கின்றது அல்லது அபாரமான சகிப்புதன்மையை உன்டுபன்னுகிறது.  இதனை அம்சமாகக் கொண்டு மனிதனுக்கு இயற்கைக் கொடுத்த திறமையை இதன் மூலம் வெளிக் கொண்டுவரலாம்.

கோபத்தை தவிர்க்க கிழே கொடுக்கப்பட்டுள்ள கதை ஒன்று எளிமையான வழி காட்டுகின்றன:

ஒரு பெரியவருக்கும் ஒரு வயாபாரிக்கும் தகராறு.

ஒரு விஷயத்தைக் கோர்ட்டுக்குக் கொண்டுபோக வேண்டும் என்று வியாபாரி விரும்பினார். ஆனால் அது பெரியவருக்கு பிடிக்கவில்லை.

ஒரு சமயம் இது பற்றிப் பேசுவதற்காகப் பெரியவர் வியாபாரியின் வீட்டிற்குச் சென்றனர். வேலைக் காரனைப் பார்த்து, “ஐயா வீட்டில் இருக்கிறாரா?” என்று விசாரித்தார்.

இதை உள்ளேயிருந்தே கேட்டுக் கொண்டிருந்த வியாபாரி இவர் காதில் படும்படியாக, “ஐயா இல்லையென்று அந்த மடையனிடம் சொல்” என்றார்.

இதைக் கேட்ட பெரியவர், “கடவுள் உனக்கு நல்ல புத்தி கொடுக்கட்டும்!” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

இதைக் கேட்டு வியாபாரியின் மனதும் மாறிற்று. அன்று மாலையே பெரியவரைத் தேடிக்கொண்டு வியாபாரி அவர் வீட்டுக்குச் சென்றார்.

“நான் உங்களை எவ்வளவோ கன்னாபின்னாவென்று பேசியிருக்கிறேன். ஆனால் உங்களுக்குக் கோபம் வருவதில்லேயே, எப்படி?” என்று கேட்டார்.

அதற்குப் பெரியவர், “கோபமே வராமல் இருக்க நான் ஒரு வழி கண்டு பிடித்திருக்கிறேன்.

“கோபம் வரும்பொழுது நாம் என்ன பண்ணுகிறோம்? கத்திப் பேசுகிறோம். கோபமாக இருக்கும்போது மெதுவாகப் பேச முடியாது. அதைப் போலவே மெதுவாகப் பேசினால் கோபம் வராது.

ஆகவே எப்பொழுதும் மெதுவாகப் பேசுவது என்று நான் வைத்திருக்கிறேன்” என்றார்.

என்ன பெருமை?

சீடன் ஒருவன் தன் குருவைக் கண்டு வணங்குவதற்காகக் காணிக்கைப் பொருளுடன் சென்றுகொண்டிருந்தான். அந்தக் குருவின் மீது ஏற்கனவே பொறாமைக் கொண்டிருந்த யோகி ஒருவர் அந்தச் சீடனை வழிமறித்தார்.

 அவனைப் பார்த்து, “உன் குருவிற்கு எதுவுமே தெரியாது. அவர் ஒரு முட்டாள். நீ அவரைவிடப் பெரிய முட்டாள். அதனால்தான் நீ அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டுள்ளாய். உன் குருவால் ஏதேனும் அற்புதம் செய்து காட்ட முடியுமா? என்னைப் போல் அவரால் நீரில் நடக்க முடியுமா? வானத்தில் பறக்க முடியுமா? அல்லது பூமியில்தான் புதைந்து கிடக்க முடியுமா? அவரால் எதுவுமே முடியாது. அப்படிப்பட்ட குருவிடம் சென்று ஏன் உன் நேரத்தை வீணாக்குகிறாய்?” என்று தற்பெருமையுடன் கேட்டார்.

 அதற்கு அந்தச் சீடன், “நான் ஏன் அவரைக் குருவாகக் கொண்டிருக்கிறேன், மதிக்கிறேன், வணங்குகிறேன் தெரியுமா? அவர் எப்பொழுதும் பிறரைக் குறை சொல்லமாட்டார், கோபப்படமாட்டார். இவற்றைத்தான் நான் அற்புதங்களில் எல்லாம் மிகச் சிறந்த அற்புதம் என்று நினைக்கிறேன்” என்று பதில் தந்தான். இதைக் கேட்ட யோகி தலைக்கவிழ்ந்தபடி அவ்விடத்தை விட்டுச் சென்றார்.

 மனிதன் பல விலங்குகள் செய்யும் சாகசங்களையும், பறவைகள் செய்யும் வித்தைகளையும் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. அவ்வாறு அது அவசியம் என்றால் விலங்குகளுக்கு என்று இருக்கின்ற சில வெளித்தோற்ற சிறப்பியல்புகளை கடவுள் மனிதனுக்கும் கொடுத்திருப்பார். மனிதன் மனிதத் தன்மையோடு  மனிதனாக வாழவேண்டும் என்பதே இயற்கையின் நீதி. இதை மீறினால் இயற்கையின் அழிவுக்கு மனிதனே காரணமாகிவிடுகிறான்.

 ஆனால் ஒரு உண்மை இயற்கையின் எழிலை மனிதன்தான் சீற்குலைக்கின்றான். அவனால் செய்யப்படும் வினைகளை மாற்றங்களை முழுமையாக மறுசுயற்சி செய்யமுடியவில்லை தினறுகின்றான்.

சாப்பிட்ட பொருள் முழுமையாக ஜீரனம் அடையாவிட்டால் வயிற்று வலி தான் வரும். அது போன்று என்ன செயல் இயறக்கைக்கு ஒவ்வாமையைக இல்லாமல் இருக்கின்றதோ அதையே செய்து மற்றவைகளை செய்யாமல் அமைதியான போக்கில் உலகை வழி நடத்த வேண்டும், என்பதற்காகவே நமது முன்னேற்கள் ஆம்மிக வழியில் பல நுனுக்களை நமக்கு முன்கூட்டியே சொல்லியிருக்கின்றனர் ஆனால் அதன் அர்த்தங்கள் ஆழமானவை.

விஜயதசமி


நவராத்திரியின் கடைசி நாளில் கொண்டாடப் பெறும் பண்டிகை விஜயதசமி.

வஜயதசமிப் பண்டிகையை நம் நாட்டின் ‘கலைப் பண்டிகை’ என்றுதான் சொல்லவேண்டும். அஷராப்பியாஸம் செய்ய உகந்த நாள் இது.

அன்றைத் தினம் புனர்பூஜை செய்து, கலைமகளின் திருவடிகளைப் பணிந்து, கல்வி கற்பர். புதுத் தொழில்களை ஆரம்பிப்பர். சிலர் பிரயாணங்களைத் தொடங்குவர்.

விஜயதசமியன்று ஆரம்பிக்கப்பெறும் நற்காரியங்கள் எல்லா வழிகளிலும் வெற்றி அடகின்றன. ஆலைகளிலும் பள்ளிகளிலும் அலுவலகங்களிலும் இந்தப் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடுவார்கள்.

பண்டைக் கால மன்னர்கள் விஜயதசமி யன்று சிம்மாசனம், வெண்கொற்றைக் குடை, செங்கோல், சாமரம் மற்றும் தங்கள் படைக் கலங்களையும், யானை குதிரை போன்ற வாகனங்களையும் பூஜித்து வந்ததாகக் கல்வெட்டுகள் மூலம் கண்டறிகிறோம்.

விஜயதசமியன்று வன்னிமரத்தை வழிபடுவது ஒரு சிறப்பான அம்சமாகக் கருதப்படுகிறது. விஷ்னு கோவில்களில் ஸ்வாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வன்னிமரம் குத்தும் வழக்கம் இன்றும் நடைபெறுகிறது.

அஞ்ஞாதவாசத்தை மேற்கொள்ளப் புறப்பட்ட பாண்டவர்கள், தங்களது ஆயுதங்களை வன்னிமரத்துள் மறைத்து வைத்துச் சென்றதாகக் கூறுவர்.

ஒரு சமயம் உலகமாதா பரமேசுவரி வன்னிமரத்து நிழலில் எழுந்தருளி இளைப்பாறினாள். அது சமயம் சீதா தேவியைத் தேடிக்கொண்டு புறப்பட்டு வந்த அனுமான் வன்னிமர்த்தடியை வலம் வந்து வணங்கிப் புறப்பட்டான் என்று கூறப் பெறுகிறது.

இக்காரணம் பற்றியே பரமேசுவரி எழுந்தருளிய வன்னிமரம் துர்க்காதேவியின் சாந்நித்யம் என்று கருதப்பெறுகிறது. இதனால் வன்னி மரத்தைப் பூஜிப்பதால் பாவ நிவிருத்தியும் சத்ருநாசமும் ஏற்படுகின்றன.

விஜயதசமிநாள்  ஜயம், வீரம், செல்வம், கல்வி, ஆகிய அனைத்துக்கும் முக்கிய தினமாகக் கருதப்பெறுகிறது.

விஜயதசமிப் பண்டிகையன்று புனர்பூஜை புரிந்து, வன்னிமரத்தை வணங்கினாள், அன்னை மகிஷாசுரமர்த்தினியின் திருவருளாள் அன்றைய தினத்தில் தொடங்கும் புதிய காரியங்கள் எதுவாக இருந்தாலும் அது வெற்றியை நோக்கி செல்லும். புதிய ஆன்மிக அன்பர்கள் அன்றைய தினமே ஆன்மிக வாழ்க்கையை தொடங்கினாள் ஆன்மிகப் பாதையில் சிறந்த முன்னேற்றம் காணலாம் அதுமட்டும்யின்றி வாழ்க்கையில் சோகங்கள் வராது மங்களகரமான வாழ்க்கையே உண்டாகும்.

மேன்மக்கள் யார்?


அறிவு படைத்த மக்களில் மூன்று பிரிவு உண்டு

1.    கீழ்மக்கள்
2.    மக்கள்
3.    மேன்மக்கள்

கீழ்மக்கள்: மக்களாகப் பிறந்தும் மாக்களைப் போல் (விலங்குகளைப் போல்) உண்பதும் உறங்குவதும் பொருந்துவது மாகவே காலங் கழிப்பார் கீழ்மக்கள், பசி தாகங்களை அவிப்பதிலேயே நாட்டமுடையவர்.

மக்கள்: மக்கள் பண்பாட்டைப் பெற்ற ஈவு இரக்கம் சாந்தம் சீலம் முதலிய நற்குணங்களையுடையவராய் வாழ்பவர்.

மேன்மக்கள்: மக்கள் பண்பாட்டைப் பெற்றதோடு அமையாது, தெய்வத்தன்மை பெற்று, அருளாளராய், பிறகுக்கென்றே வாழ்பவராய், ஒவ்வொரு மூச்சும் உலகம் உய்யும்பொருட்டே வடுபவராய் வாழ்பவர்.

நம்மில் பலரை மக்களென்ற பேரும் வடிவம் கொண்டு, மக்கள் போலவே அருந்துதல் பொருந்துதலுடன் அமைந்து, துன்பத்தை இன்பமாக மயங்கி எண்ணி ஆமை போல் தெளிவின்றித் திறிகின்றனர்.

ஆமையைக் கொன்று தின்போர் அதன் முதுகில் கெட்டியான ஓடு இருப்பதால், அதனை எளிதில் கொல்ல கிழ்கண்டவாறு முயலுவர்.

மூன்று கற்களின் மீது பெரிய இரும்புக் கொப்பரையை வைத்து, நிரம்பத் தண்ணீர் விட்டுத் தீயை மூட்டி, அதில் ஆமையை விடுத்து, மேலே ஒரு தட்டை மூடிவிடுவர். ஆமைக்கும் சுவர்க்கலோகம் கிடைத்திருப்பதாக எண்ணி, இப்படியும் அப்படியுமாக நீரில் நீந்தி விளையாடும். தண்ணீர் சூடு ஏறிக் கொதிப்புற்றவுடன் அடிப் பகுதியில் சதையுள்ள ஆமை மாண்டு ஒழியும்.

அதுபோல, வாத, பித்த சிலேத்துமமாகிய மூன்று கற்களின் மீது உடம்பாகிய இரும்புக் கொப்பரையைக் கூற்றுவானாகிய கொலைஞன் வைத்து ஆசையாகிய தண்ணீரை விட்டு, ஆன்மாவாகிய ஆமையை அதில்  விடுத்து. பிராரப்த கர்மமாகிய தீயை மூட்டி, பந்த பாசமாகிய தட்டினால் மூடி வைத்திருக்கிறான். துன்பத்தை இன்பமாக எண்ணி ஆமை நீரில் நீந்தி விளையாடுவது போல் மனிதர்களாகிய நாம் தடுமாறுகிறோம்.


பாவமும் புண்ணியமும்

துறவி ஒருவருக்கு நரகத்தையும் சொர்கத்தையும் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாயிற்று.

நேராக நரகத்திற்குச் சென்றார். அங்கே ஒவ்வோர் இடமாகப் பார்த்துக்கொண்டே வந்தார். ஒரிடத்தில் ஒரு கால் மட்டும் இல்லாத நொண்டி ஒருவன் இந்தான்.

அவனிடம், “நீ யார்? நீ ஏன் நரகத்தற்கு வரவேண்டி வந்தது?” என்று கேட்டார்.

“துறவியாரே! நான் மண்ணுலகில் பெருஞ் செல்வனாக இருந்தேன். நிறையப் பாவங்களைச் செய்ததால் இங்கே நரகத்தில் துன்பப்படுகிறேன்” என்றான் அந்த நொண்டி.

துறவி நரகத்தை விட்டு நீங்கிச் சொர்க்கத்திற்குள் நுழைந்தார். அங்கே எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தனர். அவரும் ஒவ்வோரிடமாகப் பார்த்துக்கொண்டே வந்தார்.

ஒரிடத்தில் ஒரு கால் மட்டும் தனியாக இருந்தது. அதைப் பார்த்துத் துறவி பெருவியப்படைந்தார். உடனே பக்கத்திலிருந்த ஒருவனை அழைத்து, “ஆள் இல்லாமல் ஒரு கால்  மட்டும் சொர்க்கத்திற்கு வந்தது எப்படி?” என்று கேட்டார்.

அதற்கு அவன், “துறவியாரே! இந்தக் காலுக்கு உரியவன் கொடிய பாவி. அவன் செய்யாத பாவம் இல்லை. ஆனாலும் ஒரே ஒரு முறை தாகத்தால் தவித்த ஒரு மாட்டிற்கு இரங்கித் தொலைவில் இருந்த தண்ணீர்த் தொட்டியை இந்தக்க காலினால் உதைத்து அதனருகில் தள்ளினான். அந்தப் புண்ணியத்தால்தான் இந்த ஒரு கால் மட்டும் இங்கு உள்ளது. அவனோ நரகத்தில் துன்பப்படுகிறான்” என்று விளக்கம் தந்தான்.

புதன், 10 ஏப்ரல், 2013

கடவுளைக் காட்டும் பாதை

பொதுவாக சமயத்தைப் பற்றி தெளிவான கருத்துக்கள் நம்மிடையே இல்லை.
சமூகத்தின் விதிகளுக்கிணங்க ஏதோ கோவிலுக்குச் செல்வதும், விரதங்களை அனுஷ்டிப்பதும், சடங்குகளைச் செய்வதும் ஆகிய இவையே சமயம் என்று நாம் பொதுவாக நினைக்கிறோம்.

இவற்றைத் தவிர பல மூடப்பழக்க வழக்கங்களும் நம்மிடையே தோன்றி, சமயத்தின் ‘ஓர் அணிகலன்’ போலவும் அவை விளங்குகின்றன.

நமது சமயத்தைப் பற்றி ஒர் இடத்தில் சுவாமி விவேகானந்தர் பின்வருமாறு கூறினார்.

“கோபுரம் போன்றது வானுயர்ந்து ஓங்கி வளர்ந்து, நிரந்தரமாக நிற்கும் சமயமே நமது இந்து மதம். அந்த ஆலயத்தை அடையத்தான் எத்தனை வழிகள்! அதில் எதைத் தான் நாம் பார்க்க முடியாது? நிர்க்குணமான எங்கும் வியாபித்திருக்கும் பரப்பிரம்மத்திலிருந்து பிரம்மா, விஷ்ணு, சிவன், சூரியன், சக்தி, விநாயகர், காளி போன்ற எத்தனை தெய்வங்கள்!..

“ஒரு சமயம் ஒரு கோவிலை நோக்கி பலர் சென்று கொண்டிருந்ததை நான் பார்த்தேன். ஆவல் மிகுதியால் உந்தப்பட்டு, நானும் அந்தக் கூட்டத்தினரோடு சேர்ந்து கொண்டு அந்த ஆலயத்திற்குள் சென்றேன்.

“ஆனால் அதற்குள் நான் பார்த்தது தான் என்ன? ஒருவரும்  இறைவனின் சந்நிதானத்திற்குப் போகவே இல்லை! சந்நிதானத்தின் வாயில் கதவுகளுக்கருகில் ஐம்பது தலைகள், நூறு கைகள், இரு நூறு வயிறுகள், ஐநூறு கால்கள் கொண்ட ஒரு பெரிய உருவச்சிலை இருந்தது. ஒவ்வொருவரும் சந்நிதானத்திற்குள் செல்லாமல் அந்தப் பெரிய உருவச்சிலையின். கால்களில் விழுந்து வணங்கினார்கள். அவ்விதம் விழுந்து உருண்டு கொண்டிருந்தவர்களில் ஒருவனிடம், நான் அவர்களின் அந்தச் செயலுக்கான காரணம் என்ன என்று விசாரித்தேன்.

“அதற்கு அவன், ‘உள்ளே, கர்ப்பகிரகத்திலுள்ள தெய்வத்திற்கு ஒரு வணக்கம் செலுத்தினாலோ, அல்லது சில பூக்களைப் போட்டாலோ போதுமானது. ஆனால் உண்மையான பூஜையை இதோ இங்கே வாயிலில் நிற்கும் இந்தத் தெய்வத்திற்குத்தான் போடவேண்டும்’ என்று பதில் கூறினான்.

“சரி, அப்படியானால் இந்தத் தெய்வத்தின் பெயர்தான் என்ன?” என்று நான் கேட்டேன்.

“அதற்கு அவன், ‘இது தான் புகழ் பெற்ற மூடநம்பிக்கை வழக்கம்’ என்ற பதிலை அளித்தான்.

‘இப்படிப்பட்ட பழக்க வழக்கங்களெள்லாம் சமயமல்ல’ என்று சுவாமி விவேகானந்தர் தெளிவாகக் கூறிகிறார்.

அப்படியானால் சமயம் என்பது என்ன?

ஆன்மிக வழியில் ஆத்மஞானம் பெறுவதுதான் சமயம்.

இந்தக் கருத்தையே ஆதி சங்கரரூம், “ ஒருவன் கங்காசாகரத்திற்குப் புனிதப் பயணம் மேற்கொள்ளலாம், விரதங்களைக் கடைப்பிடிக்கலாம். தானா தர்மங்கள் செய்யலாம். ஆனால் உண்மையான ஞானம் பெறாமல் இவற்றின் மூலம் மட்டும் நூறு பிறவிகளானாலும் முக்தி பெற முடியாது” என்று கூறுகிறார்.

சுவாமி விவேகானந்தர் தர்ம சிறுவராக இருக்கும் போதே ஆத்தம ஞானம் பெற விரும்பினார்.

அதன் பொருட்டு அவர் சமயப்பற்று கொண்ட பலரிடம் சென்று.
“நீங்கள் இறைவனைப் பார்த்திருக்கிறீர்களா?” என்று வினவினார்.

ஆனால் ஒருவராலும் அவர் கேட்ட கேள்விக்கு, “ஆம், பார்த்திருக்கிறேன்” என்று உறுதியாகப் பதில் சொல்ல முடியவில்லை.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் ஒருவர் மட்டுமே அவரிடம், “ஆம், நான் பார்த்திருக்கிறேன்.”  உன்னிடம் பேசுவது போல் இறைவனிடமும் பேசுகிறேன்” என்று தெளிவாகவும் தயங்கமாலும் பதில் கூறினார்.

நவீன விஞ்ஞானம் நேரான அனுபவம் இல்லாமல் எதையும் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. அது ஒவ்வொன்றிக்கும் தக்க நீருபணம் கேட்கிறது.

மேலும் சில விஞ்ஞானிகளோ இறைவன் என்று ஒருவன் இருக்கிறான் என்பதை ஒப்புக்கொள்ளவே மறுக்கிறார்கள். அதற்குக் காரணம், அப்படி ஒருவன் இருக்கிறான் என்பதற்கு உரிய போதிய சாட்சியங்களை அவர்கள் பார்க்காததுதான். ஆனால் அப்படிப்பட்டவர்களுக்கும் திட்டவட்டமான பதில் ஸ்ரீராமகிருஷ்ணரிடமிருந்து கிடைக்கிறது. அவர் நேராக இறையனுபூதியைப் பெற்றிருப்பதுதான் இந்த நவீன விஞ்ஞானிகளுக்குப் போதிய சாட்சியமும் நிரூபணமும்.

தமது ராஜயோக விரிவுரையில் சுவாமி விவேகானந்தர் சமயத்தைப் பற்றி பின்வறுமாறு விளக்குகின்றார்.-

“ஒவ்வொரு ஜீவன்மாவிலும் தெய்விகத் தன்மை மறைந்திருக்கிறது. வெளியேயும் உள்ளேயும் இருக்கும் இயற்கையைக் கட்டுப்படுத்தி, உள்ளே குடிகொண்டுள்ள இந்தத் தெய்விகத் தன்மையை மலரும்படி செய்வதுதான் முடிவான இலட்சியமாகும்.

‘இதைக் கர்மயோகம், கடவுள் வழிபாடு, மனக்கட்டுப்பாடு, தத்துவ விசாரம் என்னும் இவற்றில் ஒன்றினாலோ, பலவற்றினாலோ, எல்லாவற்றினாலோ செய்து சாதித்துச் சுதந்திரமாய் இரு.

“இதுவே சமயத்தின் மழு உண்மை ஆகும். சமய சித்தாந்தங்களோ, ஆகமக் கட்டுப்பாடுகளோ, சமயச் சடங்குகளோ, சாஸ்திரங்களோ, கோவில்களோ, இவை போன்ற மற்றவையோ, இதற்கு உதவி புரியும் இரண்டாம் தரமான முக்கியதத்துவமுடைய சாதனங்களாக மட்டுமே அமைந்திருக்கின்றன.”

ஆகையால் சுவாமிஜி கூறியதுபோல் சடங்குகள், கொள்ளைகள் போன்றவை மிகவும் முக்கியமானவையல்ல.

நமக்குள் மறைந்திருக்கும் தெய்விகத்தை நாம் வெளிப்படுத்த வேண்டும் என்பது தான் மிகவும் முக்கியம். அதன் மூலம் விடடுதலையடைவதே – முக்தி பெறுவதே – நமது இலட்சியமாக அமையட்டும்.

விடுதலை? எதிலிருந்து விடுதலை? நமது பந்தங்களிலிருந்து விடுதலை.

அப்படியானால் இந்த பந்தம் என்பதுதான் என்ன?

இறைவனை நமது கண்களிலிருந்து மறைக்கும் நம்மிடமுள்ள அறியாமையே பந்தம் எனப்படும்.

உண்மையான ஞானம் – அறியாமையால் (அஞ்ஞானத்தால்) – மறைக்கப்பட்டிருக்கிறது.

இந்த அறியாமை காரணமாகத்தான் மனிதன் மாயை என்ற வலையில் சிக்கியிருக்கிறான்.

வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் ஏமாற்றங்கள், தோல்விகள் போன்ற எல்லாவற்றுக்கும் நம்து அறியாமையே காரணம்.

உண்மையில்  நாம் தெய்வாம்சம் பொருந்தியவர்களே!

சுதந்திரமானவர்களே! இந்த உண்மை நமது அஞ்ஞானத்தால் நம்மிடமிருந்து மறைக்கப் பட்டிருக்கிறது.

எப்போது நமது அறியாமை – ஞானம் என்ற அக்கினியில்  - எரிந்து சாம்பலாகிறதோ, அப்போத நாம் விடுதலை பெற்று விடுகிறோம்.

“உண்மை ஒன்றே. ஞானிகள் அதைப் பல பெயர்களால் அழைக்கிறார்கள்.”

எல்லா மதங்களும் உண்மையானவையே! அவை அனைத்தும் ஒரே லட்சியத்தை நோக்கித்தான் செல்கின்றன.

இந்த உண்மையை பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் அனுபவபூர்வமாகக் கண்டார்; காட்டினார்; நிலை நிறுத்தியும் இருக்கிறார்.

தவற்றைத் திருத்திக் கொள்ளும் மனோபாவம்

 செய்வது தவறு!” என்று நாம் செய்த தவற்றைப் பிறர் சுட்டிக்காட்டும் போது, அது நம் தன்மானத்தில் இடிக்கிறது. எனவே நாம் வெட்கப்படுகிறோம்; கோபப்படுகிறோம்.

“அது தவறில்லை. நாம் செய்தது சரி” என்பதற்கு ஆயிரம் சமாதானம் – நொண்டிச் சாக்கு காணபதில் இறங்குகிறோம்.

தவற்றைத் தவறு என்று ஏற்றுக்கொள்வதற்கு அசாத்திய துணிவு வேண்டும்; பெருந்தன்மை வேண்டும்.

ஒரு விஷயம் தவறு என்று உணரும்போது சரியான வழியைக் காண நம் மனம் முயல்கிறது.

தவறு என்று உணராதபோது அல்லது உணர மறுக்கும்போது – நாம் செய்த தவறுக்கு நொண்டிச் சமாதானம் சொல்லும்போது – மனதிற்கு சரியான வழியைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

இது காரணமாகக் தவறுகளைக்கூட “சரியானவை” என்று மாறுபட்டுச் சிந்திக்க மனம் பழகுகிறது. மனம் இதனால் குழப்ப மடைகிறது.

டாக்டர் மேக்ஸ்வெல் மாட்ஸ் என்ற மனவியல் அறிஞர் கூறுகிறார்:

“லட்சியம் வழிகாட்ட மனம் நடக்கிறது; தவறு நேரும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் சரியான பாதைக்கு வருகின்ற – தன்னைத் தானே சரி செய்துகொள்ளும் ஒரு மகத்தான சாதனம்தான் மனம்” என்கிறார் அவர்.

தவறு செய்யாதவர்கள் உலகில் இல்லை.

“தவறிழைப்பது மனித இயல்பு” என்கிறது ஓர் ஆங்கிலப் பழமொழி.

தவறிலிருந்து மீள்வதற்கு ஒரு மனப்பக்குவம் தேவை.

நாம் செய்யும் தவற்றைக் கூட ‘சரி’ என்று வாதிட முன்வருவது எது? நம் ஆணவம்தான்.

இந்த ஆணவம் – அகங்காரம் – உண்மை நிலவரத்தை நாம் உணர்ந்துகொள்ள முடியாத படி நம் கண்ணை மறைக்கிறது. இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்; புரிந்து கொண்டு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

ஜேம்ஸ் ஆலன், “நல்ல முயற்சியினாலும் திறமையினாலும் அடைந்த வெற்றி நிரந்தரமாக இருக்க வேண்டுமானால், அந்த வெற்றி சதா சர்வ நேரமும் கண்காணிக்கப்பட வேண்டும்” என்கிறார்.

“ஆகா! நான் உச்சிக்கு வந்துவிட்டேன். இனியாரும் என்னை அசைக்க முடியாது!” என்று ஆணவத்துடன் அலட்சியப் போக்கைக் கைக்கொள்ளும் தலைவனும் சரி, “எனது நிறுவனம் இந்த ஆண்டு இவ்வளவு லாபத்தை ஈட்டியிருக்கிறது. எங்களை முதலிடத்திலிருந்து யாரும் அசைக்க முடியாது” என்று நினைக்கும் ஒரு நிறுவனத் தலைவனும் சரி – வெகு விரைவில் போட்டியாளரால்  தோற்கடிக்கப் படுவார்கள்.

‘நான் நேற்றுவரை நல்லவனாயிருந்தேன்’ என்பது எடுபடாது. தொடர்ந்து நல்லவராக இருக்கிறோமா என்பதில்தான் வாழ்க்கை இருக்கிறது; உண்மை இருக்கிறது.

மனிதன் தன்னைத்தானே கண்காணித்துக் கொண்டிருந்தால்தான் முன்னேற முடியும்.

மனிதன் தன்னைத்தானே தவறு கண்ட விடத்து திருத்திக்கொள்ள முன்வந்தால்தான் முன்னேற முடியும்.

வாட்டர்கேட் ஊழலில் குற்றம் நிரூபிக்கப் பட்டபோதிலும், “நான் குற்றவாளியல்ல” என்று சொல்லிக் கொண்டிருந்த ஜனாதிபதி நிச்சன் கடைசியில் பதவி இறங்கி அவமானப் பட நேர்ந்தது. குற்றத்தை அவர் முன்பே ஒப்புக்கொண்டிருந்தால், சட்டமன்றம் அவரை மன்னித்திருக்கக் கூடும்.

“கிழே விழுவது தவறல்ல; மீண்டும் எழுந்து நிற்காததுதான் குறை” என்றார் ஓர் அறிஞர்.

அதேபோல, தெரியாமல் தவறு செய்வது பெரும் பாவமல்ல, தவறு என்று தெரிந்த பிறகும் சரியான வழியில் நடக்கத் தவறுவது தான் பெரும் குறை.

வாழ்க்கை என்பது ஒரு பாடம். தொடர்ந்து அனுபவங்கள் வாழ்க்கையில் நமக்குப் படிப்பினைகளைத் தருகின்றன. அதில் மனம் உண்மையையும் பொய்யையும் பிரித்துப் பார்க்ககவும், மீண்டும் சரியான வழியில் நடந்து செல்லவும் முயல வேண்டும்.

வாழ்க்கை ஒரு தொடர்ந்த முயற்சி; தொடர்ந்த போராட்டம். வாழ்வு ஒரு தொடர்க் கல்வி.

“இந்த உலகம் ஓர் மிகப்பெரிய உடற்பயிற்சிக் கூடம். இங்கு நம்மை நாம் வலிமையுடையவர்களாக்கிக் கொள்ளத்தான் வந்திருக்கிறோம்” என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

வெற்றியாளர்களை ஆராய்ந்தோமானால் யாருமே நூறு சதவிதம் சரியான முடிவெடுத்தவர்களாக இருந்ததில்லை; தவறே செய்யாமல் பூரணத்வம் பெற்ற மனிதர்களாக யாரும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.

அவ்வப்போது இருக்கும் நிலைமைகளை ஆராய்ந்து நம் அனுபவத்திற்கேற்ப, நமது மனச்சாட்சிக்கேற்ப ஒரு முடிவுக்கு வருகிறோம். அது பின்னால் தவறாகப் போகலாம். ஆனால் முடிவெடுத்த சமயத்தில் நியாயமான காரியத்தைச் செய்தோமா என்பதுதான் கேள்வி.

“வெற்றிகளிலிருந்து நாம் எந்தப் பாடத்தையும் படிக்க முடியாது; தவறிலிருந்துதான் நாம் கற்றுக்கொள்ள முடியும்” என்கிறார்கள் அறிஞர்கள்.

நேரான பாதை என்ற முக்கிய தடத்திலிருந்து தவறுகள் நம்மை வேறு தடங்களில் இறக்கி விடுகின்றன. அதை உணர்ந்தவுடன் நாம் நமது வழியைத் திருப்பி, மீண்டும் போக வேண்டிய சரியான முக்கிய தடத்திற்கு வந்து சேருகிறோம்.

ஆத்மா முன்னேற வாய்ப்பளிக்கப்பட்ட இடம். அதை உணர்ந்து வாழ்கிறோமா என்பதைத்தான் அடிக்கடி சீர்த்தூக்கிப் பார்க்க வேண்டும்.

“தவறுகளாகவே என் வாழ்க்கை அமைந் திருக்கிறதே!” என்று புலம்பத் தேவையில்லை. சிலருக்கு தவறுகளிலிருந்து மீள்வதற்கு அதிகப் பயிற்சி தேவைப்படுகிறது. சிலர் ஓரிரு தவறுகளிலேயே உண்மைகளைப் புரிந்து கொண்டு விடுகிறார்கள்.

“தவறுகளை வாழ்த்துங்கள்; கெட்ட சூழ்நிலை தோன்றினால் அது மாறிவிடும் என்று ஆசி கூறி நம்பிக்கைத் தெரிவியுங்கள்.”

“முறையற்ற ஒரு செயலைச் செய்து விட்டதாகவே நீ நினைத்தாலும் அதற்காக நீ திரும்பிப் பார்க்க வேண்டாம். நீ அப்படிப் பட்ட தவறுகளைச் செய்யாமல் இருந்திருந்தால், இன்று நீ இருக்கும் நிலையை அடைந்திருக்க முடியும் என்று நம்புகிறாயா? எனவே நீ செய்த தவறுகளை வாழ்த்து. அந்தத் தவறுகள் உன்னை அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன. துன்பங்களுக்கு நல்வாழ்த்துக்கள்! இன்பங்களுக்கு நல்வாழ்த்துக்கள்!”